Tuesday, December 13, 2011

சத்துமாவு கஞ்சி

இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .

தேவையானவை :

வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்

செய்முறை :

வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .

குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 - 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.

உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை

இட்லி , பொங்கல்

ஒரு 6மாதம் 7 மாதம் ஆனதும் , இட்லி பொங்கல் தரலாம். மசிஞ்ச சாதத்தில் துளி ரசம், பருப்பு, நெய் விட்டு தரலாம் .

ஒரு உணவை அல்லது கறிகாய்யை தரும்போது, 1 வாரம் முழுக்க தரவேண்டும், அப்ப தான் அது குழந்தைக்கு பிடிக்கிறதா, ஒத்த்துக்கொள்கிறதா என தெரியும். அதை பார்த்து விட்டு பின் அதுத்த உணவுக்கு போகலாம். இல்லா விட்டால் எது குழந்தைக்கு அலர்ஜி என கண்டு பிடிக்க முடியாது.

இட்லி தரும்போது, துளி சக்கரை தொட்டு தரலாம். கையால் நன்கு மசித்து தான் எதையுமே தரணும்.

பொங்கல் தருவதானால், நாம் தாளிக்கும் முன்பே தனியே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பிறகு துளி உப்பு போட்டு கலக்கவும். பிறகு ஒரு துளி நெய்யை அந்த மிளகு சீரகம் வறுத்த வாணலி இல் விட்டு , அதை இந்த , தனி யே எடுத்து வைத்துள்ள பொங்கலில் போட்டு கலந்து தரலாம். ஏன் என்றால், நாம் சாப்பிடும் பொங்கல் குழந்தைக்கு காரமாக இருக்கும்.

சாத்துக்குடி ஜூஸ்

இதை நாங்கள் 11 நாளிலிருந்து தருவோம். குழந்தைக்கு சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் பிழிந்து தரவும்.

தேவையானவை :

சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.

குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் 'சி' நிரம்பியது. தெம்பாக இருக்கும் புன்னகை

தக்காளி சூப்

தேவையானவை:

நல்ல பழுத்த தக்காளி 1
துளி உப்பு
துளி மிளகு பொடி

செய்முறை:

வெந்நீரில் தக்காளியை போடவும்.
தோலை உரிக்கவும்,
விதைகளை எடுத்துவிட்டு மசிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கிளறவும்.
துளி உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அறினதும் வடிகட்டி, வேண்டுமானால் மிளகு பொடி போட்டு குழந்தை கு தரவும்.

மசித்த ஆப்பிள்

தேவையானவை:

ஆப்பிள் 1

செய்முறை:

குக்கர் இல் முழு ஆப்பிள் ஐ வைத்து ஆவி இல் வேக விடவும்.
வெளி இல் எடுத்து தோல் , கொட்டைகளை நீக்கி நன்கு மசிக்கவும்.
சக்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து குழந்தைக்கு ஊட்டவும்.
இல்லாவிட்டால் நிறைய தண்ணீர் சேர்த்து வடிகட்டி , பாட்ட்லில் தரவும்.

குறிப்பு: பேதி ஆகும்போது இது போல வேகவத்த ஆப்பிள் சாப்பிட்டால் பேதி நிற்க்கும்; குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் தான்.

பார்லி ஜலம்

தேவையானவை:

பார்லி 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
தேவையானால் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

பார்லி யை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லத்துடன் மிசில போட்டு 1 டம்ளர் தண்ணி விட்டு அரைத்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
வெல்லம் வேண்டாம் என நினப்பவர்கள் 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
எலுமிச்சை சாறும் தேவை என்றால் தான்.

குறிப்பு: பார்லி யை அரக்க வேண்டாம் என நினப்பவர்கள், பார்லி வெந்ததும், வடி கட்டி சக்கரை யோ வெல்லமோ போட்டு கலந்து தரலாம். பார்லி ஜலம் குடிப்பதால் நன்கு "நீர் பிரியும்"; தாகம் மட்டு படும் வெல்லம் சேற்பதால் இரும்பு சத்து கிடைக்கும். எலுமிச்சை சாறு விட்டமின் 'சி'

பருப்பு ஜலம்

தேவையானவை:

பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், மசித்து இன்னும் 1 டம்ளர் தண்ணி விட்டு மசித்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
ஒரு சிட்டிகை உப்பு அல்லது 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.

குறிப்பு: குழந்தைக்கு பயத்தம் பருப்பு வேண்டுமானால் சேர்க்கலாமே ஒழிய துவரம் பருப்பு கூடவேக்கூடாது கூடாது கூடாது பால் தரும் தாய்மார்களே , பால் தரும் வரை துவரம் பருப்பு சேர்க்காமல் இருக்கணும்.

Monday, December 12, 2011

புழுங்கல் அரிசி கஞ்சி

புழுங்கல் அரிசி கஞ்சி: இது ரொம்ப சத்தானது. நாங்க 4 -5 மாதத்திலேயே ஆரம்பிச்சுடுவோம்.

தேவையானவை:

1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.

செய்முறை :

அரிசியை வரட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும் .
நல்லா பொரியனும், ஆனால் கருக கூடாது.
அரிசி நல்லா பொரியும் பொது, பார்லி போட்டு வறுக்கணும்.
அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியெவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.

7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல் தரலாம். .

அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம்

குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும்

குழந்தைகளுக்கு உணவுகள்

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

பாலக் பனீர்

இந்த 'பாலக் பன்னீரை' விரும்பாதவர்களே கிடையாது எனலாம் புன்னகை

தேவையானவை :

பாலக் 2 கட்டு
பனீர் 500 கிராம்
எண்ணை 1/4 கப்
தயிர் 1/4 கப்
தனியாப்பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
கிராம்பு பொடி 1/2 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் அல்லது துருவிய பனீர் 1 ஸ்பூன் ( அலங்கரிக்க )

அரைக்க வேண்டிய பொருட்கள் :

பெரிய வெங்காயம் 2
பூண்டு 10 -12 பல்
இஞ்சி 1 துண்டு
கொத்துமல்லி தழை 1 கைப்பிடி அளவு
புதினா 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் 7 -8
நன்கு விழுதாக அரைக்கவும்

செய்முறை:

முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்துக்கொள்ளவும்.
மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும் .
தனியே வைக்கவும் .
வாணலி இல் எண்ணை விட்டு அரைத்த மசாலா விழுதை முதலில் போட்டு வதக்கவும்.
பனீர் ஐ துண்டுகளாக்கவும் .
எண்ணை பிரிந்து வரும்போது, பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
தனியாப்பொடி , சீரகப்பொடி, பட்டை பொடி ,ஏலப்பொடி ,கிராம்பு பொடி ,உலர்ந்த வெந்தய இலைகள் எல்லாம் போடவும்.
நன்கு கலக்கவும், இப்ப தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
கொதிக்கவிடவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
அருமையான 'பாலக் பனீர் ' தயார்.
ஒரு serving dish இல் எடுத்து வைக்கவும்.
துருவிய பனீர் அல்லது கிரீம் கொண்டு அலங்கரிக்கவும் .
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் முதலில் பனீர் துண்டுகளை எண்ணை இல் வறுத்து எடுக்கலாம்.

பனீர் சப்பாத்தி

இது எங்க வீட்டில் செம ஹிட் புன்னகை செய்வதும் சுலபம் .

தேவையானவை:

பனீர் - 200 கிராம் (நன்கு துருவிக்கொள்ளவும் )
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
உப்பு
சப்பாத்தி செய்ய தேவையான மாவு
எண்ணை கொஞ்சம்

செய்முறை:

வாணலி இல் துருவின பனிரை போடவும்.
மிளகு சீரகத்தை பொடித்து போடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும்.
நல்ல ஒரு பந்து போல சுருண்டு வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.
இது தான் 'stuffing material' அதாவது இதைத்தான் நாம் சப்பாத்தி உள்ளே வைக்கணும். புன்னகை
இதை ஒரு தட்டில் அல்லது பேசனில் வைத்துக்கொள்ளவும்; கொஞ்சம் ஆறட்டும்.
சாதாரணமாய் எப்படி சப்பாத்திக்கு மாவு கலப்பீர்களோ அப்படி கலந்து வைக்கவும்.
ஒரு 1/2 மணி கழித்து, சப்பாத்தி மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி , சப்பாத்தி இடவும்.
அதன் நடுவில் செய்து வைத்துள்ள பனீர் கலவையை 1 ஸ்பூன் வைக்கவும்.
நன்கு மூடி, சப்பாத்தி யை மெல்ல இடவும்.
கல்லில் போட்டு இரு புறமும் எண்ணை விட்டு எடுக்கவும்.
அருமையான 'பனீர் சப்பாத்தி ' தயார்.

பனீரில் பலவகை உணவுகள்


பன்னீர் செய்வது எப்படி ?

பாலாடைக்கட்டி என்பது 'பனீர் ' என்று சொல்ல படுகிறது பால்லை காய்ச்சிய பின் அதன் மேல் படிவது 'பால் எடு' அது பாலாடைக்கட்டி இல்லை .

பாலில் துளி எலுமிச்சை சாறு விடவேண்டும், அப்ப பால் திரிந்து விடும், அதை ஒரு மெல்லிய மஸ்லின் துணி இல் விட்டு வடிகட்ட வேண்டும். நன்கு அழுத்தி, எல்லா நீரையும் வெளியேற்ற வேண்டும். ஒரு 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் அதிலுள்ள நீர் சொட்டும் படி செய்யவேண்டும். பிறகு ஒரு கனமான பொருளை அதன் மேல் வைக்க வேண்டும் . அப்ப கிடைப்பது தான் பாலாடைக்கட்டி.

இதைக்கொண்டு பல உணவுகள் தயாரிக்கலாம்

பாலாடைக்கட்டி பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். அது மென்மையாகவோ கடினமாகவோ இருக்கும். அது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. 'பனீர்' நல்ல மிருதுவாக வர, எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது 'ஃபிரெஷ் கிரீம் ' கொஞ்சம் சேர்க்கணும்.

வடிக்கட்டும் போது வெளியேறும் நீர் 'Whey Water' எனப்படும் ; அதை ஒரு 4 நாள் ஃபிரிஜ் இல் வைத்து பயன் படுத்தலாம். எதற்க்கு என்று கேட்கிறீர்களா? மீண்டும் பனீர் செய்ய அல்லது சப்பாத்தி பிசைய . சரியா?

பாலாடைக்கட்டியில் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றூம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன.

Monday, September 26, 2011

கடலை பருப்பு இனிப்பு சுண்டல்

வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு புன்னகை

தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார் புன்னகை

காராமணி இனிப்பு சுண்டல்

வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு புன்னகை

தேவையானவை:

காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார் புன்னகை

மெரினா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த மெரினா சுண்டல் எங்க வீட்டில் ஹிட். எங்க பாட்டி எப்பவும் நவராத்திரி
ஞாயிறு கண்டிப்பாக செய்வார்கள். ஆனால் இது சாமிகளுக்கு இல்ல ஆசாமிகளுக்கு புன்னகை

தேவையானவை:

பட்டாணி 2 கப்
புளிப்பு மாங்காய் 1 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கினது 1/2 கப்
வெங்காயம் 2 பெரியது (பொடியாக நறுக்கவும்)1
இஞ்சி 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3 -4 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய் பொடி 1 ஸ்பூன்

தாளிக்க:
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:


பட்டாணியை முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி, துருவின இஞ்சி , பச்சை மிளகாய் போடவும்.
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மாங்காய் , தேங்காய் போடவும்.
மிளகாய் பொடி தூவி கிளறவும்.
ஒரு 2 நிமிடம் கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், 'மெரினா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்' ரெடி புன்னகை
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: தேவையானால், எலுமிச்சை கூட பிழியலாம் புன்னகை

மசாலா சுண்டல்

பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்

மசாலா அரைக்க :
கடலை பருப்பு 6 ஸ்பூன்
உளுந்து 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
தனியா 4 ஸ்பூன்
எண்ணை 1 ஸ்பூன்

தாளிக்க:
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைக்க கொடுத்தவைகளை போட்டு வறுக்கவும்.
அறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மசாலா பொடி தூவி கிளறவும்.
ஒரு 2 நிமிடம் கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம் புன்னகை

மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல்

பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மிளகாய் பொடி தூவி கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம் புன்னகை

தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2

இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு,பயத்தம் பருப்பு ,பச்சை பயறு , வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.

தேவையானவை:

மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 2 -3
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை கோட்டவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

குறிப்பு: இதற்க்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி இலேயே செயலாம். தலித்ததும், கலைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான் புன்னகை

தேங்காய் பருப்பு போட்டு சுண்டல்

இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.

தேவையானவை:

மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன தனியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பட்டாணி, போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

நவராத்திரி சுண்டல்கள்

முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.

கொத்துக்கடலை,
பச்சை பயிறு,
வேர்கடலை,
பட்டாணி,
காராமணி,
மொச்சை,
ராஜ்மா,
கொள்ளு,
பயத்தம் பருப்பு,
கடலை பருப்பு
என சுண்டல்கள் செயலாம்.

நவராத்திரி சுண்டல்கள்

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன புன்னகை

Tuesday, September 13, 2011

மோர் குழம்பு

தேவையானவை :

'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.

குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.

Saturday, September 10, 2011

பரங்கிக்காய் புளிக் குழம்பு

தேவையானவை :

பரங்கிக்காய் – 2 பத்தை
சின்ன வெங்காயம் – 10 (உரித்தது)
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
புளி – எலுமிச்சையளவு அல்லது புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
குழம்பு மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் (வறுத்து அரைத்தது )

தாளிக்க:

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம், எல்லாம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணை கொஞ்சம்

செய்முறை:

பரங்கிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டைஉரித்து தட்டி வைக்கவும்.
தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டங்களை போட்டு வதக்கி, அதில் குழம்பு பொடி போட்டு புளிக் கரைத்ததையும் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
பரங்கிக்காய் நல்லா வெந்து பச்சை வாசனை போனவுடன், வெந்தயப்பொடி போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.

ஓலன்

தேவையானவை:

பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு

செய்முறை:

தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.

எரிசேரி

இதுவும் எங்க வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணுவதுபுன்னகை

தேவையானவை:

வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )

அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:

சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.
வெந்த காயுடன் கோட்டவும்.
வேண்டுமானால் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார்.
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் புன்னகை

மிளகாய் அவியல்

கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது புன்னகை

தேவையானவை:

துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

அவியல்

அவியல் - இது எங்க வீட்டில் 'ஹிட்' புளியோதரை , அடை இவற்றுக்கு ரொம்ப நல்ல சைட் டிஷ். சடத்தில் போட்டும் சாப்பிடலாம். புன்னகை

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'அவியல்' ரெடி

பால் பாயசம்

தேவையானவை :

அ‌ரி‌சி - 1 க‌‌ப்
பா‌ல் - 4 க‌ப்
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 12
ஏல‌க்கா‌ய் பொடி - 1 தே‌க்கர‌ண்டி
நெ‌ய் - 2 மேஜை‌‌க் கர‌ண்டி

செய்முறை:

ஒரு வா‌ண‌லி‌யி‌ல் நெ‌ய் ‌வி‌ட்டு, அ‌‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
‌பிறகு வாணலி இல் ஒரு க‌ப் அ‌ரி‌சி‌க்கு, ஒரு க‌ப் பா‌ல், ஒரு க‌ப் த‌ண்‌ணீ‌ர் எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.
பால் ,த‌ண்‌ணீ‌ர் கலவை‌யி‌ல் அ‌ரி‌சி ந‌ன்கு வெ‌ந்து குழைய வே‌ண்டு‌ம்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அ‌ரி‌சி நன்கு வெந்ததும், ‌மீத‌மிரு‌க்கு‌ம் பாலை ஊ‌ற்‌றி அடி‌பிடி‌க்காம‌ல் ‌கிளற வே‌ண்டு‌ம்.
பா‌ல் சு‌ண்டி வரு‌ம்போது ‌தீயை ‌‌மிதமாக வை‌த்து‌வி‌ட்டு ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்கவு‌ம். ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏல‌‌க்கா‌ய் பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பா‌ல் பாயச‌ம் தயா‌ர்.

அடை பிரதமன்

எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் புன்னகை செப்.9 -2011 ஓணம் வருகிறது புன்னகை அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் அன்பு மலர்


அடை பிரதமன் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். நாம் செய்யும் 'பால் கொழுக்கட்டை' போன்றது. கொஞ்சம் செய்முறை வேறு புன்னகை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானவை :

அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்

செய்முறை:

அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பின், நன்கு ஆற விடவும்.
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடி செய்து போடவும்.
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அடைபிரதமன் தயார்.

ரவா கிச்சடி

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும் புன்னகை

Ready Made புளியோதரை

Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

இப்ப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.

புளிக்கூட்டு செய்யும் முறை

கூட்டுக்கு பருப்பு கறிகாய் வெந்ததும், வாணலில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு கறிகாய் போட்டு , இரண்டு ஸ்பூன் புளி பேஸ்ட் போட்டு, பெருங்காயம் , கறிவேப்பிலை, வறுத்து அரைத்த வெந்தய பொடி, உப்பு , தேங்கா துருவல்,அரைத்துவைத்துள்ள மசாலா எல்லாம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிடலாம். ரொம்ப சுலபம்.

வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய

பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி என எல்லாம் போட்டு கொதித்ததும் இறக்கவும்.


பருப்புசாம்பார் போலவே, ரசம் இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.

ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புன்னகை புளி யும் 'திட்டமாக ' உபயோகிக்கலாம்.


வத்தல் குழம்புக்கும் இதே போல் தான் :)

புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூறியவைகளின் செய்முறையை பார்போம்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும் புன்னகை

கறிவேப்பிலை குழம்பு 2

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

கறிவேப்பிலை குழம்பு 3

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.

சாம்பாரில் போடும் வெங்காய வடாம்

செட்டி நாட்டு வெங்காய வடகம்

தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்

செய்முறை :

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

Wednesday, August 31, 2011

பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்


மிளகு குழம்பு

மிளகு குழம்பு – உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 – 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை – கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
‘பருப்பு துவைய’ லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

சளி , ஜுரத்துக்கு மிளகு ரசம்

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் ” அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை )

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

தேவையானவை:

ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் [b]சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை.


வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)

இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே. புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

சுடு சாதத்தில் ‘பிரெஷ் ‘ ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. சோகம்" longdesc="5" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="சோகம்"> முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)

இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

இனிப்புச் சட்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

செய்முறை:

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்க வேண்டும்.


புளிச் சட்னி

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.

இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.

இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.

அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

Tuesday, August 30, 2011

அரிசி வடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும் புன்னகை

கோபி 65

இது ரொம்ப சுவையான டிஷ் புன்னகை அருண், உங்களுக்காக கோபி 65 புன்னகை

இதோ செய்முறை புன்னகை

தேவையானவை :

காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க

செய்முறை:

காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால் அவை வெளியே வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம் அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய் தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களி இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களியும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.

குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.

மாலைநேர சிற்றுண்டிகள்

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

நெய் இல்லாத போளி

எனக்கு இவ்வளவு நெய் வேண்டாம் என்று சொல்பவர்கள் நெய் இல்லாமலே போளி
செயலாம். அதர்க்கான குறிப்பு இங்கே புன்னகை

தேவையானவை:

கடலை மாவு 1 கப்
பொடித்த சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணை

செய்முறை:

கடலை மாவை துளி நெய் விட்டு சிவக்க வறுக்கவும். (கொஞ்சம் தான் புன்னகை )
ஆறினதும், சர்க்கரை பொடி ஏலப்பொடி போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு2 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி போல் இடவும்.
அதன் மேல் பூரண கலவையை 1 -2 ஸ்பூன் போடவும்.
மெதுவாக மூடவும்.
மெல்ல ரொம்ப அழுத்தாமல் 'சப்பாத்தி போல் இடவும்'
கஷ்டமானால் அரைவட்டமாக மடித்து கொஞ்சமாய் இடவும். இது கொஞ்சம் சுலபம் புன்னகை
அது போல் எல்லாவற்றையும் செய்யவும்.பிறகு அடுப்பில் தோசை கல்லை போடவும்
இட்டு வைத்துள்ள போளியை எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தேவையானால் நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான நெய் இல்லாத போளி தயார்.
இதை 1 வாரம் வரை கூட வைத்து இருக்கலாம், சாப்பிடும்போது, நெய் விட்டு தரலாம்.
வேண்டாம் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

தேங்காய் கோவா போளி

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் தேங்காய் துருவலை போடவும்.
சக்கரை ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும், கோவாவை உதிர்த்து போட்டு கிளறி இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
இது தான் பூரணம்
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி களை , ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

பருப்பு சக்கரை போளி

சிலருக்கு வெல்லம் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளது, அவர்கள் வெல்லத்துக்கு பதில் சக்கரை போட்டு செயலாம். ஆனால் அளவு மாறுபடும் .

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
சக்கரை 2 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி சக்கரை எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்; ஏன் என்றால் சக்கரை போட்டு அரைத்ததும் ரொம்ப தண்ணியாக இருக்கும் .
எனவே கொஞ்சம் நெய் விட்டு நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

பால் போளி 2

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1/2 கப்
முந்திரி 1/2 கப்
பிஸ்தா 1/2 கப்
கோவா 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 12 -15 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம். புன்னகை

பால் போளி

இதை பல முறைகளில் செயலாம். சுவை கூடும், ரிச் ஆகவும் இருக்கும். சில முறைகளை பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1 கப்
முந்திரி 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 10 -12 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
15 நிமிஷம் ஊரவைக்கவும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும்
முந்திரியை யும் வெந்நீரில் போட்டு வைக்கவும் .
இரண்டையும் துளி பால் விட்டு மசிய அரைக்கவும் .
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும், அறைத்துவைத்துள்ள விழுதை போட்டு கலக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்த தும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்பு: பாதாம் முந்தி ரி இல்லாமலும், வெறுமன கொதிக்கும் பாலில் பூரிகளை போட்டு சாப்பிடலாம் அதுவும் நல்லா தான் இருக்கும்.

பருப்பு போளி

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் 1 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

Blog Archive