Tuesday, December 13, 2011

சத்துமாவு கஞ்சி

இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .

தேவையானவை :

வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்

செய்முறை :

வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .

குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 - 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.

உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை

இட்லி , பொங்கல்

ஒரு 6மாதம் 7 மாதம் ஆனதும் , இட்லி பொங்கல் தரலாம். மசிஞ்ச சாதத்தில் துளி ரசம், பருப்பு, நெய் விட்டு தரலாம் .

ஒரு உணவை அல்லது கறிகாய்யை தரும்போது, 1 வாரம் முழுக்க தரவேண்டும், அப்ப தான் அது குழந்தைக்கு பிடிக்கிறதா, ஒத்த்துக்கொள்கிறதா என தெரியும். அதை பார்த்து விட்டு பின் அதுத்த உணவுக்கு போகலாம். இல்லா விட்டால் எது குழந்தைக்கு அலர்ஜி என கண்டு பிடிக்க முடியாது.

இட்லி தரும்போது, துளி சக்கரை தொட்டு தரலாம். கையால் நன்கு மசித்து தான் எதையுமே தரணும்.

பொங்கல் தருவதானால், நாம் தாளிக்கும் முன்பே தனியே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பிறகு துளி உப்பு போட்டு கலக்கவும். பிறகு ஒரு துளி நெய்யை அந்த மிளகு சீரகம் வறுத்த வாணலி இல் விட்டு , அதை இந்த , தனி யே எடுத்து வைத்துள்ள பொங்கலில் போட்டு கலந்து தரலாம். ஏன் என்றால், நாம் சாப்பிடும் பொங்கல் குழந்தைக்கு காரமாக இருக்கும்.

சாத்துக்குடி ஜூஸ்

இதை நாங்கள் 11 நாளிலிருந்து தருவோம். குழந்தைக்கு சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் பிழிந்து தரவும்.

தேவையானவை :

சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.

குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் 'சி' நிரம்பியது. தெம்பாக இருக்கும் புன்னகை

தக்காளி சூப்

தேவையானவை:

நல்ல பழுத்த தக்காளி 1
துளி உப்பு
துளி மிளகு பொடி

செய்முறை:

வெந்நீரில் தக்காளியை போடவும்.
தோலை உரிக்கவும்,
விதைகளை எடுத்துவிட்டு மசிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கிளறவும்.
துளி உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அறினதும் வடிகட்டி, வேண்டுமானால் மிளகு பொடி போட்டு குழந்தை கு தரவும்.

மசித்த ஆப்பிள்

தேவையானவை:

ஆப்பிள் 1

செய்முறை:

குக்கர் இல் முழு ஆப்பிள் ஐ வைத்து ஆவி இல் வேக விடவும்.
வெளி இல் எடுத்து தோல் , கொட்டைகளை நீக்கி நன்கு மசிக்கவும்.
சக்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து குழந்தைக்கு ஊட்டவும்.
இல்லாவிட்டால் நிறைய தண்ணீர் சேர்த்து வடிகட்டி , பாட்ட்லில் தரவும்.

குறிப்பு: பேதி ஆகும்போது இது போல வேகவத்த ஆப்பிள் சாப்பிட்டால் பேதி நிற்க்கும்; குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் தான்.

பார்லி ஜலம்

தேவையானவை:

பார்லி 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
தேவையானால் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

பார்லி யை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லத்துடன் மிசில போட்டு 1 டம்ளர் தண்ணி விட்டு அரைத்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
வெல்லம் வேண்டாம் என நினப்பவர்கள் 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
எலுமிச்சை சாறும் தேவை என்றால் தான்.

குறிப்பு: பார்லி யை அரக்க வேண்டாம் என நினப்பவர்கள், பார்லி வெந்ததும், வடி கட்டி சக்கரை யோ வெல்லமோ போட்டு கலந்து தரலாம். பார்லி ஜலம் குடிப்பதால் நன்கு "நீர் பிரியும்"; தாகம் மட்டு படும் வெல்லம் சேற்பதால் இரும்பு சத்து கிடைக்கும். எலுமிச்சை சாறு விட்டமின் 'சி'

பருப்பு ஜலம்

தேவையானவை:

பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், மசித்து இன்னும் 1 டம்ளர் தண்ணி விட்டு மசித்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
ஒரு சிட்டிகை உப்பு அல்லது 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.

குறிப்பு: குழந்தைக்கு பயத்தம் பருப்பு வேண்டுமானால் சேர்க்கலாமே ஒழிய துவரம் பருப்பு கூடவேக்கூடாது கூடாது கூடாது பால் தரும் தாய்மார்களே , பால் தரும் வரை துவரம் பருப்பு சேர்க்காமல் இருக்கணும்.